Description
பூலோக வைகுண்டம் திருவரங்கம். தென்னாடும் வட நாடும் தொழநின்ற திருவரங்கம். 108 திவ்ய தேசங்களில் தலைமையானது திருவரங்கம். ஆழ்வார்களும் ஆசார்யர்களும் மண்டிக்கிடந்தவிடம் திருவரங்கம். இங்கு உயிர் நீத்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது. கஸ்தூரி ரங்கன் ; அவன் காவேரி ரங்கன்.
திருவரங்கத்தைப்பற்றியும் ரங்கநாதனது பெருமைகளையும் அங்கு நடக்கும் பங்குனி உத்திரப்பெருவிழா, வைகுண்ட ஏகாதசித் திருவிழா முதலிய உத்ஸவங்களையும் இன்னும் பல பெருமைகளை எல்லாரும் புரிந்துகொள்ளும் வகையில் சிறப்பாக இக்குறுந்தகட்டில் விளக்கியுள்ளார். இதனை நாமும் கேட்டு ஆண்டாள் அரங்கன் அருள் பெறுவோம். வாரீர்.

There are no reviews yet.